Ananda Coimbatore

          ஆனந்தா சங்கம் என்பது பரமஹன்ஸ யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’யில் உள்ள உன்னதமான ஆன்மீக போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகளாவிய இயக்கம் ஆகும். ஆனந்தா சங்கம் 1969 ஆம்ஆண்டு பரமஹன்ஸ யோகானந்தரின் நேரடி சீடரான சுவாமி கிரியானந்தாவால் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.  ஆனந்தா சங்கமானது நேரடி வகுப்புகள், அமைதித் தலங்கள், ஆன்மீக மையங்கள், ஒன்று கூடிய சமூகங்கள் மற்றும் பல்வேறு மக்களையும் அடையும் பல நடவடிக்கைகள் மூலம் பரமஹன்ஸ யோகானந்தரின் சுய உணர்தல் போதனைகளால் ஒருமித்த எண்ணம் கொண்ட ஆன்மாக்களின் ஆன்மீக தாகத்தைத் தணிக்கவும், ஆன்மீக நட்பைப் பெறவும் ஒரு ஆன்மீகச் சோலையாகச் செயல்படுகிறது.

          கிரியா யோகா என்பது ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியை விரைவாக துரிதப்படுத்தும் நுட்பமாகும்.  இது பரமஹன்ஸ யோகானந்தர் மூலம் பரவலாக அறியப்பட்டது.  யோகானந்தரின் கூற்றுப்படி, யோகாவின் இலக்கை அடைவதற்கு இன்று மனித குலத்திற்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த நுட்பம் கிரியா யோகம் ஆகும்: தெய்வத்துடன் ஐக்கியம். இறுதியில், கிரியா யோகம் என்பது ஒரு பயிற்சி என்ற நுட்பத்தைவிட அதிகமானது; இது மற்ற நடைமுறைகள், சரியான வாழ்க்கை மற்றும் ஆன்மீக ஆசிரியர்கள் அல்லது குருக்கள் கிரியா வரிசைக்கு சீடர்களை உள்ளடக்கிய ஒரு ஆன்மீகப்பாதையாகும்.

          ஆனந்தா சங்கம் கோயம்புத்தூர், கிரியா யோக தியானத்திற்கான  வகுப்புகளை வழங்குகிறது.  இந்த போதனைகளைக் கற்றுக்கொள்ளவும, நடைமுறைப் படுத்தவும் உண்மை தேடுபவர்கள ஒன்றுகூடும் இடம் இது. தற்போது தேவைக்கேற்ப இணையதளத்தில் வகுப்புகளை வழங்குகிறோம்.

இந்த ஆன்மீகப்பயணத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்!

கிரியா யோகம் என்றால் என்ன?
 
கிரியா யோகம் என்பது ஒருவரின் ஆன்மீக வளரச்சியை அதி விரைவாகத் துரிதப்படுத்தும் ஒரு தியான நுட்பம். கிரியா யோகம் பரமஹன்ஸ
யோகானந்தர் அருளிய ‘ஓரு யோகியின் சுயசரிதம்’ புத்தகத்தின் மூலம் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டது.
 
யோகானந்தர் கற்பித்த வழிமுறைப்படி கிரியா யோகம் ஆனந்த சங்காவில் ஒரு விரிவான ஆன்மீக வழிகாட்டியாகக் கற்பிக்கப்படுகிறது.  பல்வேறு மத, தேசிய பின்னணியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள ஆனந்தா கிரியா யோகிகள் மூலம், கிரியாவின் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது.
 
யோகானந்தரின் கூற்றுப்படி, தெய்வீகத்துடன் ஒன்றிணைக்கும் இலக்கை அடைய மனித குலத்திற்குக் கிடைத்த மிக உன்னதமான பயிற்சி கிரியா ஆகும்.  கிரியா நடைமுறைக்கு ஏற்றதும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததும் ஆகும். தொடர்ந்து கிரியா யோகப் பயிற்சி செய்வதின் மூலம், கிரியா யோகிகளின் கவனம் செலுத்தும் திறன் மேம்பட்டுள்ளது. அவர்கள் வணிகத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் திறன்பட செயலாற்ற முடிகிறது.  மற்றும் அனைத்து வகையிலும் சிறந்த மனிதர்களாக வாழ கிரியா யோகம் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். 
 
ஒருவர் கிரியா யோகம் தீட்சை பெற ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம்வரை ஆகலாம். இந்த காலம் கிரியா யோகம் கற்பதற்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் பரமஹன்ஸ யோகானந்தர் அணுகிய முறைப்படி கற்றுக் கொள்ளவும், அத்துடன் தினசரி உங்கள் வாழ்க்கையில் தியானம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
 
முதல் நிலை வகுப்பு : தியானம் செய்ய கற்றுக் கொள்ளுதல். 
 
இரண்டாம் நிலை வகுப்பு : ராஜ யோகாவின் கலை மற்றும் அறிவியலுடன் உங்கள் தியானத்தை ஆழப்படுத்துதல்.
 
மூன்றாம் நிலை வகுப்பு : கிரியா யோகம் தீட்சை பெற பரமஹன்ஸ யோகானந்தரின் சீடராக உறுதிமொழி எடுத்துக் கொள்ளுதல்.
 
நான்காம் நிலை வகுப்பு : கிரியா யோகம் தீட்சைக்கு  தயாராகுதல்.

பயிற்சி விபரம்:

  • தியானப் பயிற்சிக்கான ஆசனத்தில் வசதியாக அமர எளிய பரிந்துரைகள்.
  • பரமஹன்ஸ யோகானந்தர் அருளிய மனதை ஒருநிலைப்படுத்தும் உத்தி.
  • அமைதியற்ற மனதை எவ்வாறு சாந்தப்படுத்துவது.
  • தினசரி வாழ்வில் அமைதி மற்றும் மகிழ்ச்சியான அனுபவங்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது
  •  சுவாசத்திற்கும் மனதிற்கும் உள்ள முக்கியமான தொடர்பையும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதின் சக்தியையும் அனுபவத்தில் உணர்தல்.
தமிழ் தியான பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர் கீழே உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.

Kriya Yoga is an ancient meditation technique of energy and breath control, or pranayama. It is part of a comprehensive spiritual path, which includes additional meditation practices along with right living.